/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் தற்கொலை
/
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் தற்கொலை
ADDED : ஆக 02, 2025 07:39 AM
திருவெண்ணெய்நல்லுார் : மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்,70; இவர் கடந்த 5 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப் பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை, 28ம் தேதி அதிகாலை 6:00 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத போது ஜன்னல் கம்பியில் துாக்கிட்டு தற் கொலை செய்ய முயன்றுள்ளார்.
உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெருமாள் நேற்று முன்தினம் காலை 10:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.