ADDED : ஆக 09, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் சிறுமி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் வி.மருதுார் பகுதியை சேர்ந்தவர் சிட்டிபாபு மகள் வித்யாஸ்ரீ, 17; பிளஸ் 2 வரை படித்து முடித்த இவர், நகரில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடை க்காததால், பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.
விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.