sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காணாமல் போன பெண் மர்ம சாவு; திருமணமான 2 மாதத்தில் பரிதாபம்

/

காணாமல் போன பெண் மர்ம சாவு; திருமணமான 2 மாதத்தில் பரிதாபம்

காணாமல் போன பெண் மர்ம சாவு; திருமணமான 2 மாதத்தில் பரிதாபம்

காணாமல் போன பெண் மர்ம சாவு; திருமணமான 2 மாதத்தில் பரிதாபம்


ADDED : ஜன 09, 2024 07:27 AM

Google News

ADDED : ஜன 09, 2024 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே திருமணமான இரண்டே மாதத்தில் இளம் பெண் கிணற்றில் சடலமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த சா.பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்பாபு, 27; இவரது மனைவி ரம்யா, 24; இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் ஆனது.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி முதல் ரம்யாவைக் காணவில்லை. இது குறித்து மாமனார் பழனி அரகண்டநல்லுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவரது விவசாயக் கிணற்றில் ரம்யா மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் உதவியுடன் போலீசார், உடலை மீட்டனர். இதுகுறித்து அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

திருமணமாகி இரண்டு மாதங்களில் மர்மமான முறையில் இறந்துள்ளதால் ஆர்.டி.ஓ., விசாரணை மேற்கொண்டு வருகிறார்.






      Dinamalar
      Follow us