ADDED : டிச 15, 2025 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: என்.ஆர். பேட்டை ஊராட்சியில் 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' பிரசாரம் நடந்தது.
தி.மு.க., சார்பில் நடந்த பிரசாரத்திற்கு, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., வீடு வீடாகச் சென்று தி.மு.க., அரசின் சாதனை புத்தகங்களை வழங்கி பிரசாரம் செய்தார்.
மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய அவை தலைவர் வாசு, ஊராட்சி தலைவர் பிலால், முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், வனக்குழு தலைவர் ராமு மற்றும் பூத் முகவர்கள், ஊராட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

