/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் எம்.எல்.ஏ., ஆய்வு
/
அரசு கல்லுாரியில் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஜூலை 08, 2025 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம : திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரியில், மயிலம் எம்.எல்.ஏ., நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, கல்லுாரி முதல்வர் ரங்கராஜனிடம், இன்று 8ம் தேதி நடைபெற உள்ள சிறப்பு சேர்க்கை குறித்தும், அதில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது கல்லுாரி சார்பில், மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு, எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து வாங்கித்தர ஏற்பாடு செய்வதாக, எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.