/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய நியாயவிலை கடை எம்.எல்.ஏ., திறப்பு
/
புதிய நியாயவிலை கடை எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : அக் 05, 2025 03:20 AM

செஞ்சி : காரை ஊராட்சியில் புதிய நியாயவிலை கடை கட்டடத்தை மஸ்தான் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
செஞ்சி ஒன்றியம் காரை ஊராட்சியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13.59 லட்சம் மதிப்பில் புதிகாக கட்டப்பட்ட புதிய நியாயவிலை கட்டட திறப்பு விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.
ஊராட்சி தலைவர் கலையரசி வெங்கடேசன் வரவேற்றார். இதில், மஸ்தான் எம்.எல்.ஏ., புதிய கட்டடத்தை திறந்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
கூட்டுறவு கடன் சங்க செயலாளர் நாகப்பன், ஊராட்சி தலைவர்கள் சங்க தலைவர் ரவி, துணை தலைவர் ராமஜெயம் சின்னதுரை, விற்பனையார் தினேஷ்குமார், ஒன்றிய அவைத்தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதிகள் அய்யாதுரை, செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.