/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் அருகே தாய், மகன் மாயம்
/
விழுப்புரம் அருகே தாய், மகன் மாயம்
ADDED : நவ 23, 2024 06:13 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே குழந்தையுடன் தாய் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த கரடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 25; கோயம்புத்துாரில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரண்யா, 23; கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 வயதில் மகன் உள்ளார். சரண்யா சிறுவாக்கூர் கிராமத்தில் உள்ள அவரது தாய் சாந்தி, 45; வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 21ம் தேதி, வீட்டிலிருந்து சரண்யா மகனுடன், கரடிப்பாக்கம் சென்று வருவதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தாய் சாந்தி அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.