ADDED : டிச 27, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், ; விழுப்புரத்தில் பணிக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீ சில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம், ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் அய்யனார் மகள் ரஞ்சனி, 19; இவர், 9ம் வகுப்பு வரை பயின்று விட்டு, அங்குள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இவர், வழக்கம் போல் நேற்று முன்தினம் பணிக்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இவரை குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
இதுகுறித்து அவரது தாயார் தமிழ்செல்வி அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து ரஞ்சனியை தேடி வருகின்றனர்.