sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போதையில் துன்புறுத்திய மகனுக்கு தோசையில் விஷம் கொடுத்து கொலை

/

போதையில் துன்புறுத்திய மகனுக்கு தோசையில் விஷம் கொடுத்து கொலை

போதையில் துன்புறுத்திய மகனுக்கு தோசையில் விஷம் கொடுத்து கொலை

போதையில் துன்புறுத்திய மகனுக்கு தோசையில் விஷம் கொடுத்து கொலை

3


ADDED : ஜன 22, 2025 09:19 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:19 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : வளவனுார் அருகே,அடிக்கடி போதையில் துன்புறுத்தி வந்த மகனுக்கு, தோசையில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த தாய் மற்றும் காதலியை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் , வளவனுார் அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி மகன் விஸ்வலிங்கம்,29; லாரி டிரைவர். இவர், கடந்த 17ம் தேதி இரவு 7.00 மணிக்கு தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடலில் ரத்த காயங்கள் இருந்தன.

வளவனுார் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்தனர். எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில், வளவனுார் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கவுதமன், தங்கபாண்டியன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அதில், விஸ்வலிங்கம் அடித்து கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.

இது தொடர்பாக, அவருடன் குடும்பம் நடத்திய செல்வி, விஸ்வலிங்கத்தின் தாய் முனியம்மாள் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இருவரையும் விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

விஸ்வலிங்கம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், திருக்கோவிலுார் அடுத்த மேலத்தாழகனுார் கிராமத்திற்கு லாரி லோடு ஏற்றும் பணிக்கு சென்றபோது சீன்னகரீன் மகள் செல்வி,25, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்யாமல் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தியுள்ளனர்.

விஸ்வலிங்கத்திற்கு குடி பழக்கம் இருந்ததால், பல முறை செல்வி மற்றும் தனது தாய் முனியம்மாள்,64; ஆகியோரிடம் தகராறு செய்துள்ளார். பணம் கேட்டு இருவரையும் திட்டி, தாக்கி உள்ளார்.

இவரின் தொந்தரவை பொறுத்துக் கொள்ள முடியாத செல்வி, விஸ்வலிங்கத்தை கொலை செய்ய திட்டம் தீட்டியதற்கு, முனியம்மாளும் ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த 17ம் தேதி போதையில் வந்த விஸ்வலிங்கம், இருவரிடமும் தகராறு செய்து தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த இருவரும், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை தோசை மாவில் கலந்து தோசை ஊற்றி விஸ்வலிங்கத்திற்கு தந்துள்ளனர். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி துடிதுடித்து இறந்தார்

இந்த சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள், விஸ்வலிங்கத்திற்கும், இவரின் உறவினர்கள் சிலருக்கும் தகராறு நடந்தது. உறவினர்கள் தான், விஸ்வலிங்கத்தை கொலை செய்ததாக நம்ப வைக்க, விஸ்வலிங்கம் இறந்த பின், அவரின் உடலில் கத்தியால் கிழித்து நாடகம் ஆடியுள்ளனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us