ADDED : டிச 27, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியில் தாய் மாயமானது குறித்து மகள் புகார் கொடுத்துள்ளார்.
மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு முருகன் மனைவி ரதி 43; இவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். வழக்கம்போல இவர் கடந்த 23ஆம் தேதிகடையை திறந்து 1: 30 மணி வரையில் கடையில் இருந்துள்ளார். அதன் பின்னர் இவர் காணாமல் போனார். இவரை மகள் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. காணாமல் போனவர் வெள்ளை நிற பூ போட்ட புடவை அணிந்திருந்தார்.
மகள் ப்ரீத்தி கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன அழகு நிலைய உரிமையாளர் ரதியை தேடி வருகின்றனர்.