sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதி

/

ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதி

ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதி

ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜன 13, 2025 05:48 AM

Google News

ADDED : ஜன 13, 2025 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லூர்; ரயில்வே சுரங்க பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லூர் -அரசூர், கடலூர் -திருவண்ணாமலை செல்வதற்கான முக்கியசாலையாகவும் மூன்று மாவட்டங்களை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆலங்குப்பம் ரயில்வே கேட் வழியை சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் ஆலங்குப்பம் இருவழி ரயில்வே பாதையாக மாற்றப்பட்டது. ரயில் போக்குவரத்து அதிகரிப்பால் ரயில்வே கேட்டை அடிக்கடி மூடும் நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அலுவலகம் செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதை அடுத்து ரயில்வே துறையினரால் ஆலங்குப்பம் கிராமத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டில் ரயில்வே சுரங்கபாதை அமைக்கப்பட்டது. சுரங்கப்பாதையை ஒட்டி மலட்டாறு செல்வதால் எந்நேரமும் அங்கு தண்ணீர் வற்றாமல் தேங்கி நிற்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். அப்பகுதியை ஆய்வு செய்த கலெக்டர் தண்ணீரை அங்கிருந்து வெளியேற்ற ராட்சத மோட்டார் வைத்து 24 மணி நேரமும் ஒரு நபர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதனை அதிகாரிகள் சில மாதங்கள் கடைப்பிடித்து வந்தனர்.இதையடுத்து மீண்டும் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதோடு அவ்வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல் அவசர நிலைக்காக செல்லும் 108 ஆம்புலன்ஸ் கூட இந்த வழியாக செல்ல முடியாத அவல நிலை நீடித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us