/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறப்பு மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை
/
சிறப்பு மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை
ADDED : மார் 04, 2026 03:34 AM
விழுப்புரம்: காணையில் கல்வித்துறை பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ், காணை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு ஒன்றிய அளவிலான பயிற்சி மையம் இயங்குகிறது. அங்கு நடந்த மருத்துவ மதிப்பீட்டு முகாமில், மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆரோக்கிய அனிதா, 25 சிறப்பு மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.
தொடர்ந்து, மாணவர்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள், மாற்றுத் திறனாளி மாணவர்களின் சுய பராமரிப்பு, உதவி உபகரணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிறப்பு பயிற்றுனர்கள் விஜயலட்சுமி, சரண்யா, பரமேஸ்வரி, மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். இயன்முறை மருத்துவர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.

