தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாவட்ட தலைநகரில் நவீன கலையரங்கம்... அவசியம்! விழுப்புரம் நகராட்சி திடலில் அமைக்கப்படுமா?  

மாவட்ட தலைநகரில் நவீன கலையரங்கம்... அவசியம்! விழுப்புரம் நகராட்சி திடலில் அமைக்கப்படுமா?  

மாவட்ட தலைநகரில் நவீன கலையரங்கம்... அவசியம்! விழுப்புரம் நகராட்சி திடலில் அமைக்கப்படுமா?  


UPDATED : ஜூன் 10, 2026 06:25 PM

ADDED : ஜூன் 10, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2026 06:25 PM ADDED : ஜூன் 10, 2026 06:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நவீன கலையரங்கம் அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இதனை, நிறைவேற்றிட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

மாவட்ட தலைநகரான விழுப்புரத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொருட்காட்சிகள், முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கும் பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, கலையரங்கம் அவசியமாக உள்ளது.

இதற்காக ஒவ்வொரு முறையும், அரசு கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில் தற்காலிகமாக ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இத்துடன், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், மாநாடு மற்றும் முக்கிய தலைவர்க பங்கேற்கும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு, விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும். லட்சக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், நகராட்சி திடலில் பிரமாண்டமான அளவில், அரசு சார்பில் கலையரங்கை உருவாக்கிட வேண்டும்.

இங்கு, விழா மேடை பக்கவாட்டில் மின் விளக்கு வசதி, மைதானத்தில் உயர்கோபுர மின் விளக்குகள், கழிவறை வசதி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

இதன் மூலம், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அரக் நலத்திட்ட பயனாளிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை, அரசு நிர்வாகம் சிரமமின்றி நடத்த முடியும். அத்துடன், அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு வாடகை அடிப்படையில், கலையரங்கத்தை பயன்படுத்த அனுமதிக்கலாம்.

இதன் மூலம் நகராட்சிக்கு நிரந்தர வருவாய் கிடைப்பதற்கு வழி வகை உள்ளது.

பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய கலையரங்கம் அமைத்திட, மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மக்களுக்கு அடிப்படை வசதி

விழுப்புரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில், கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். பஸ் நிலையதில் பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, விழுப்புரம் நகராட்சி திடலில், நவீன வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் அரசு கலையரங்கம் அமைத்திட வேண்டும். இதற்கான முன்னெடுப்பை மாவட்ட கலெக்டர் மேற்கொள்ள வேண்டும். இளையராஜா, தே.மு.தி.க., தெற்கு நகர செயலாளர் பல லட்சம் ரூபாய் செலவு விழுப்புரம் நகரில் பொதுக்கூட்டம், மாநாடு நடத்திட ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், லட்சக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.
இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், நகராட்சி திடலில் பிரமாண்டமான அளவில், அரசு சார்பில் கலையரங்கை உருவாக்கிட வேண்டும். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ராஜ்குமார், து.தலைவர் மத்திய மாவட்ட காங்., நகராட்சிக்கு வருவாய் அரசு நலத்திட்ட உதவிகள், பொது நல அமைப்புகள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உதவியாக இருக்கும்.
புதிய பஸ் நிலையத்திற்கு அருகில் கலையரங்கம் அமைந்தால், பொதுமக்கள் சிரமம் இன்றி, வந்து செல்வதற்கு வசதியாக அமையும். இதன் மூலம் நகராட்சி நிர்வாகத்திற்கு கணிசமான வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. திருப்பதி பாலாஜி, விழுப்புரம். நடவடிக்கை எடுக்கப்படுமா? மாவட்ட தலைநகரான விழுப்புரத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொருட்காட்சிகள், பல்வேறு கட்சித் தலைவர்கள் பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, கலையரங்கம் அவசியமாக உள்ளது. இதற்கு, விழுப்புரம் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள நகராட்சி திடல் பொருத்தமான இடமாக உள்ளது.
இங்கு கலையரங்கம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். . மணிமாறன், பா.ம.க., மாவட்ட அமைப்பு செயலாளர் நவீன கலையரங்கம் தேவை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பகுதியை துாய்மையாக பராமரித்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி திடலில், மிக பிரமாண்டமான அளவில் நவீன கலையரங்கம் அமைத்திட வேண்டும். இதன் மூலம், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வசதியாக அமையும்.
மேலும், வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி ஏற்படுத்தித் தர வேண்டும். அப்பு, தி.மு.க., விழுப்புரம் கிராமங்களுக்கு பஸ் வசதி விழுப்புரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில், கட்டணமில்லா கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும். மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திட வேண்டும். விழுப்புரத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் டவுன் பஸ்களை தடையின்றி இயக்கிட வேண்டும். பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, விழுப்புரம் நகராட்சி திடலில், நவீன வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய அரசு கலையரங்கம் அமைத்திட வேண்டும். இதற்கான முன்னெடுப்பை மாவட்ட கலெக்டர் மேற்கொள்ள வேண்டும். அய்யனார், ஓட்டுநர் சமூக ஆர்வலர்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us