sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 நீண்ட இழுபறிக்கு பிறகு புதிய பஸ் நிலையம் திறப்பு

/

 நீண்ட இழுபறிக்கு பிறகு புதிய பஸ் நிலையம் திறப்பு

 நீண்ட இழுபறிக்கு பிறகு புதிய பஸ் நிலையம் திறப்பு

 நீண்ட இழுபறிக்கு பிறகு புதிய பஸ் நிலையம் திறப்பு


ADDED : பிப் 05, 2026 06:24 AM

Google News

ADDED : பிப் 05, 2026 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் ரூ.27.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது.

திண்டிவனம் அருகே சிப்காட் வளாகத்தில் நேற்று காலை நடந்த அரசு விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின், நகராட்சி சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தை, காணொளி மூலம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து புதிய நிலையத்தில் நடந்த விழாவில், நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில், கமிஷனர் பானுமதி முன்னிலையில் குத்துவிளக்கேற்றி திறந்து வைக்கப்பட்டு, பொது மக்களுக்கு நகராட்சி சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், பாபு, சின்னச்சாமி, பார்த்தீபன், ராம்குமார், அரும்புகுணசேகர், சத்தீஷ், ரேணுகா,பாஸ்கர், முத்துலட்சுமி, ேஹமமாலினி, தில்ஷாத்பேகம், புனிதா, லட்சுமிபிரபா,லதா சாரங்கபாணி, ரேகாநந்தகுமார், சுதாகர், மணிகண்டன், ரம்யா உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

நகராட்சி சார்பில் பொறியாளர் புவனேஸ்வரி மேலாளர் நெடுமாறன், உதவி வருவாய் அலுவலர் அசோக் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்திருந்த மகளிருக்கான அரசு பஸ்சில், நகர்மன்ற தலைவர், கமிஷனர், கவுன்சிலர்கள் அனைவரும் பயணம் செய்தனர்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

திண்டிவனத்திற்கு நீண்ட நாட்களாக அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் இல்லாமல் இருந்து வந்தது. பொது மக்களின் நீண்ட நாளைய கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில் நேற்று முதல் திண்டிவனம் நகராட்சியின் புதிய பஸ் நிலையம் செயல்பாட்டிற்கு வந்து உள்ளது, பொது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








      Dinamalar
      Follow us