/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை
/
அரசு பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை
ADDED : பிப் 04, 2024 04:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அண்டராயநல்லுார் கஸ்துாரிபா காந்தி பாலவிகார் வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் ரோட்டரி சங்கம் சார்பில் தலைவர் கன்யா ரமேஷ் தலைமை தாங்கி, 72 மாணவிகளுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புத்தாடை வழங்கினார். செயலாளர் அன்பழகன், முன்னாள் தலைவர் பாலகுருநாதன், முன்னாள் துணை ஆளுநர் காங்கேயன், பொறுப்பு ஆசிரியை பூங்காவனம் உட்பட பலர் பங்கேற்றனர்.