sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்

/

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்


ADDED : அக் 13, 2025 12:39 AM

Google News

ADDED : அக் 13, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி; செஞ்சி ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், செயலாளர்களுக்கு வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.

ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஏ.பி.டி.ஓ., சவுந்தர பாண்டியன் வரவேற்றார்.

பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபா சங்கர் ஆகியோர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

இதில் பருவமழைக்கு முன்பு மழைநீர் வடிகால் பகுதிகளை சீரமைக்கவும், சிறு பாலங்களில் அடைப்புகளை அகற்றி பராமரிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

மேல்நிலை குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்தல், குடியிருப்புகளில் மழை நீர் தேங்காமல் கண்காணித்தல் மற்றும் ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் ஊராட்சி தலைவர்கள் சங்க தலைவர் ரவி, செயலாளர் அய்யனார், பொருளாளர் ராஜேந்திரன், துணை பி.டி.ஓ., க்கள் ஏழுமலை, அபிராமி மற்றும் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர். துணை பி.டி.ஓ., சசிகலா நன்றி கூறினார் .






      Dinamalar
      Follow us