sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

/

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்


ADDED : ஜன 24, 2025 06:53 AM

Google News

ADDED : ஜன 24, 2025 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் உள்ள சத்துணவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், காலை உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டத்தின் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும், ரூ.3,000த்தில் தொகுப்பூதிய அடிப்படையில் சத்துணவு ஊழியர்கள் பணி நியமனம் செய்வதை நிறுத்த வேண்டும் உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் நகராட்சி மைதானத்தில், மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் புனிதா வரவேற்றார்.

மாவட்ட செயலாளர் மலர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில செயலாளர் ஜெயக்குமாரி நிறைவுரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் அருளரசி, ரெஜினா, தனஞ்செயன், வாசுகி, சுஜாதா, சித்ரா, ஆனந்தன் மற்றும் சங்கத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us