ADDED : நவ 22, 2024 06:38 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: கோலியனுார் அங்கன்வாடி மையத்தில், ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கவிதா, மருத்துவ அலுவலர் ராவணன் முன்னிலை வகித்தனர். லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, வழக்கறிஞர் கண்ணப்பன், மாவட்ட கவுன்சிலர் கேசவன், மருத்துவர் அணி செந்தில், ஒன்றிய பொருளாளர் சவுந்திரராஜன், துணைச் செயலாளர் ஶ்ரீதர், ஜெயபால், முன்னாள் தலைவர் சம்பசிவம், நிர்வாகிகள் மணி, சிவசங்கர், குணசேகரன், குணசேகரன், அய்யனார், சிவகுரு, மனோகர், ராஜா, மண்ணாயி, சிவமலை பங்கேற்றனர்.
