sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்த அலுவலர் அறிவுரை

/

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்த அலுவலர் அறிவுரை

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்த அலுவலர் அறிவுரை

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்த அலுவலர் அறிவுரை


ADDED : பிப் 02, 2024 03:52 AM

Google News

ADDED : பிப் 02, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள், உற்பத்தி செய்த விதைகள் அல்லது சாகுபடிக்கு பயன்படுத்த உள்ள விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தலாம் என விதை பரிசோதனை அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

விதை உற்பத்திக்கு பயன்படுத்தும் விதைக் குவியலில் பிற ரகங்களின் கலப்பு குறிப்பிடப்பட்ட அளவுக்கு மேல் இருந்தால் அடுத்த பருவத்தில் பயன்படுத்தும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட ரகங்களின் கலவையால் பூக்கள் பூக்கும் பருவம், பயிர்களின் உயரம், அறுவடை காலம் ஆகியவை மாறுபட்டிருக்கும்.

கலப்பில்லாத தரமான விதை உற்பத்தி செய்ய உற்பத்திக்கும் பயன்படுத்தும் விதையில் பிற ரக கலப்பின் விகிதம் அனுமதிக்கப்படும் அளவிற்குட்பட்டு இருப்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும்.

தங்களிடம் இருப்பு வைத்துள்ள விதைகளில் இருந்து மாதிரி எடுத்து அளித்தால், விதையின் புறத்துாய்மை, ஈரப்பதம், பிற ரக கலப்பு மற்றும் முளைப்புத்திறன் ஆகியவை பரிசோதனை செய்து முடிவுகள் வழங்கப்படுகிறது.

விதை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள விதைகளின் தரத்தை அறிந்து நம்பகத்தன்மை கெடாமல் வியாபாரம் செய்ய தங்களிடம் உள்ள அனைத்து விதைகளையும் பரிசோதித்த பின் விற்பனை செய்ய வேண்டும்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளை பரிசோதனை செய்ய விதைமாதிரி ஒன்றுக்கு 80 ரூபாய் ஆய்வு கட்டணமாக செலுத்தி விதையின் தரத்தை அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us