ADDED : செப் 29, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்: திண்டிவனம் அருகே குட்கா விற்ற டீ கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் அடுத்த உள்ள நல்லாளம் பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக பிரம்மதேசம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் நல்லாளத்தில் உள்ள ராஜேந்திரன், 60; என்பவரது டீ கடையில் சோதனை செய்தனர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.