sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

யாசகம் எடுத்து பொதுநல நிதி வழங்கும் துாத்துக்குடி முதியவர்

/

யாசகம் எடுத்து பொதுநல நிதி வழங்கும் துாத்துக்குடி முதியவர்

யாசகம் எடுத்து பொதுநல நிதி வழங்கும் துாத்துக்குடி முதியவர்

யாசகம் எடுத்து பொதுநல நிதி வழங்கும் துாத்துக்குடி முதியவர்

2


ADDED : நவ 25, 2024 11:31 PM

Google News

ADDED : நவ 25, 2024 11:31 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தான் யாசகம் எடுக்கும் தொகையை, பொதுநல நிதியாக வழங்கி வரும் முதியவர், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுக்கா ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன், 75; விவசாய தொழிலாளியான இவருக்கு மனைவியும், ஒரு மகள், இரண்டு மகன்களும் உள்ளனர்.

பிள்ளைகளுக்கு திருமணம் ஆன நிலையில், பாண்டியன் குடும்பத்தைப் பிரிந்து, துறவரம் மேற்கொண்டு யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்நிலையில் தான் யாசகம் எடுக்கும் தொகையை சேமித்து வைத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவியும், பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று கலெக்டரை சந்தித்து, பொதுநல நிதியும் வழங்கி வருகிறார்.

இந்த வகையில், நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்த அவர், கலெக்டர் பழனியை சந்தித்து, தான் சேமித்து வைத்திருந்த ரூ.10,000 தொகையை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

இதுவரை ரூ.1.60 கோடி அளவில், இதுபோல் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று, நிவாரண நிதியாக வழங்கியுள்ளதாகவும், விழுப்புரம் மாவட்டத்திற்கு இதுவரை 4 முறை வந்து, தலா ரூ.10 ஆயிரம் வீதம், முதல்வரின் பொதுநல நிதிக்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

முதியவர் ஒருவர், தொடர்ந்து யாசகம் எடுத்து, பொதுநல நிதிக்கு வழங்கி வரும் செயலை, அலுவலர்கள், பொது மக்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us