ADDED : ஆக 25, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்:
இறந்த மூதாட்டியின் கண்கள் அரவிந்த் கண் மருத்துவனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த அன்னபூரணி அம்மாள், 75; இவர், உடல் நலம் பாதித்து நேற்று முன்தினம் இரவு இறந்தார். அவரது கண்கள், உறவினர்களின் ஒப்புதலுடன், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
திண்டிவனம் சேலஞ்சர்ஸ் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் ஏகாம்பரம், நிர்வாகிகள் முத்துக்குமரன், சபாபதி, முருகன், உசேன் பாஷா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.