ADDED : அக் 03, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: ஓட்டலில் ஏற்பட்ட தகராறு செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த பொய்யாப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் மகன் சுரேஷ், 37; இவர், கடந்த 27ம் தேதி, அதே பகுதியில் உள்ள கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு, குடிபோதையில் வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி, 55; சுரேஷிடம் தகராறு செய்து அவரை தாக்கினார்.
இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, வேலுசாமியை கைது செய்தனர்.