ADDED : ஜூன் 10, 2025 10:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் வேன் மோதி இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த போரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சவுகத்அலி, 57; இவர், நேற்று முன்தினம் இரவு 9:50 மணிக்கு கக்கனுார் கூட்ரோடு அருகே சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற ஈச்சர் வேன் மோதியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில், கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.