ADDED : ஜூன் 25, 2025 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார், நேற்று காலை ரோந்து சென்றனர்.
அப்போது, பழைய பஸ் நிலையம் அருகே ஜி.ஆர்.பி., தெருவில் ஆன் லைன் லாட்டரி விற்ற, அதே பகுதியைச் சேர்ந்த பழனி, 45; புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த செல்வம், 35; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.