/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தண்ணீர் பந்தல் திறப்பு: த.வெ.க.,வினர் புகார்
/
தண்ணீர் பந்தல் திறப்பு: த.வெ.க.,வினர் புகார்
ADDED : மார் 28, 2025 05:24 AM

திண்டிவனம், மார்ச் 28-
திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டையில், கொடியம் கிராமத்தை சேர்ந்த த.வெ.க.,வை சேர்ந்த மணிகண்டன் தலைமையில் நேற்று முன்தினம் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
இதற்கிடையில், த.வெ.க., மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களான பாஞ்சாலம் பூமிநாதன், பட்டணம் சமத்துவபுரம் சிவலிங்கம் ஆகியோர், வெள்ளிமேடுபேட்டை போலீசில், மணிகண்டன் த.வெ.க., கட்சியை சேர்ந்தவர் இல்லை, அவர் திறந்து வைத்த தண்ணீர் பந்தலை அப்புறப்படுத்த வேண்டும் என புகார் அளித்தனர்.
போலீசார் அழைத்து விசாரித்தபோது, கடந்த 10 ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கத்தில் இருப்பதாகவும், தற்போது கட்சியில் உறுப்பினராக உள்ளதாகவும் மணிகண்டன் கூறினார்.
இதையடுத்து, வெள்ளிமேடுபேட்டையில் வேறு இடத்தில் நீங்கள் தனியாக தண்ணீர் பந்தலை திறந்து கொள்ளுங்கள் என, சிவலிங்கம், பூமிநாதன் தரப்பினரை சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.