sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இறந்தவர் உடலை எரிக்க எதிர்ப்பு

/

இறந்தவர் உடலை எரிக்க எதிர்ப்பு

இறந்தவர் உடலை எரிக்க எதிர்ப்பு

இறந்தவர் உடலை எரிக்க எதிர்ப்பு


ADDED : டிச 23, 2024 04:44 AM

Google News

ADDED : டிச 23, 2024 04:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர் : ஆரோவில் அருகே இறந்த மூதாட்டியின் உடலை எரிக்க, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி கோரிமேடு அடுத்த தமிழக பகுதியான கலைவாணர் நகர், ஸ்ரீ ராம் நகர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புக்கள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இறந்தால், மாட்டுக்காரன்சாவடி பகுதியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்து வந்தனர்.

இதனிடையே, உடலை எரிப்பதால் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் ஜெபாசிங் மூலம் சென்னை ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

இந்நிலையில், கலைவாணர் நகரை சேர்ந்த ராஜாராம் மனைவி ஜெயலட்சுமி, 70; என்பவர் நேற்று இறந்தார். அவரது உடலை நேற்று மாலை 4;30 மணிக்கு, மாட்டுக்காரன்சாவடி இடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். அப்போது, கோர்ட் தடை உத்தரவு பெற்றுள்ளதாக கூறி தடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவலறிந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., உமாதேவி, தாசில்தார் நாராயணமூர்த்தி, வானுார் பி.டி.ஓ., கார்த்தியகேயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பினரும் போலீசார் முன்னிலையில் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

அப்போது, கடந்த சில ஆண்டுகளாக நாங்கள், இப்பகுதியில்தான் உடலை அடக்கம் செய்து வருகிறோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள், போலீஸ் தடையை மீறி சுடுகாட்டில், உடலை தகனம் செய்தனர்

இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us