/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பங்குனி உத்திர திருவிழா மயிலம் கோவிலில் கொடியேற்றம்
/
பங்குனி உத்திர திருவிழா மயிலம் கோவிலில் கொடியேற்றம்
பங்குனி உத்திர திருவிழா மயிலம் கோவிலில் கொடியேற்றம்
பங்குனி உத்திர திருவிழா மயிலம் கோவிலில் கொடியேற்றம்
ADDED : மார் 15, 2024 11:10 PM

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பூஜை செய்து, 6:40 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. 11:00 மணிக்கு மூலவருக்கு மகா தீபாராதனை, நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் வீதியுலா நடக்கிறது.
வரும் 19ம் தேதி இரவு 8:00 மணிக்கு தங்கம் மயில் வாகனத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். 22ம் திருக்கல்யாண உற்சவம் மற்றும் வெள்ளி குதிரை வாகனத்தில் மலை வலக்காட்சி நடக்கிறது.
வரும் 23ம் தேதி பங்குனி உத்திர தேர் திருவிழா நடக்கிறது. 24ம் தேதி காலை தீர்த்த வாரி உற்சவமும் தொடர்ந்து இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. 25ம் தேதி முத்து பல்லக்கு உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.

