sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை பெற்றோர்கள் பள்ளி முன் போராட்டம்

/

 அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை பெற்றோர்கள் பள்ளி முன் போராட்டம்

 அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை பெற்றோர்கள் பள்ளி முன் போராட்டம்

 அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை பெற்றோர்கள் பள்ளி முன் போராட்டம்


ADDED : டிச 24, 2025 06:39 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த குமளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 89 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. பள்ளியில் 2 ஆசிரியைகள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் தொகுப்பு ஊதிய அடிப்படையில் ஒரு ஆசிரியை என 3 பேர் பணிபுரிகின்றனர். இதில் ஒரு ஆசிரியை மருத்துவ விடுப்பில் உள்ளார்.

தலைமையாசிரியர் பணியிடத்தை நிரப்பக் கோரியும், காலியாக உள்ள இடத்திற்கு நிரந்தர ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தியும் நேற்று பெற்றோர்கள் பள்ளியின் நுழைவு வாயிலை இழுத்து மூடி தங்கள் பிள்ளைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கண்டமங்கலம் வட்டார கல்வி அலுவலர் ரேணுகா மற்றும் போலீசார் நேரில் சென்று, காலி பணியிடத்தை நிரப்பக்கோரி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us