/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பஸ் மோதி நடந்து சென்றவர் பலி
/
அரசு பஸ் மோதி நடந்து சென்றவர் பலி
ADDED : நவ 16, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி அருகே அரசு பஸ் மோதி சாலையில் நடந்து சென்றவர் இறந்தார்.
செஞ்சி அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பன் மகன் அர்ஜூனன், 55; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் களையூர் கிராமத்தில் இருந்து வல்லம் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற அரசு பஸ் அர்ஜூனன் மீது மோதியது. படுகாயம் அடைந்த அர்ஜூனன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.