sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாறுமாறாக செல்லும் வாகனங்கள் விபத்து அபாயத்தால் மக்கள் திக்... திக்...

/

தாறுமாறாக செல்லும் வாகனங்கள் விபத்து அபாயத்தால் மக்கள் திக்... திக்...

தாறுமாறாக செல்லும் வாகனங்கள் விபத்து அபாயத்தால் மக்கள் திக்... திக்...

தாறுமாறாக செல்லும் வாகனங்கள் விபத்து அபாயத்தால் மக்கள் திக்... திக்...


ADDED : மே 06, 2025 05:19 AM

Google News

ADDED : மே 06, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி தெற்கு பைபாஸ் முனையில் தாறுமாறாக செல்லும் வாகனங்களை ஒழுங்குப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விக்கிரவாண்டி வடக்கு பைபாஸில் விபத்துகளை தவிர்க்க உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. திண்டிவனம் நோக்கி செல்லும் பஸ்கள், லாரிகள், வடக்குபைபாஸ் முனை அருகே வந்து,வளைந்து தெற்கு பைபாஸில் செல்கிறது.

சென்னை - திருச்சி நான்குவழி சாலைகளில் எந்நேரமும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். தெற்கு பைபாஸ் முனையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு வரும் விவசாய டிராக்டர்கள் சாலையை கடக்கும்போது வாகன நெரிசல் ஏற்படுகிறது. சாலையின் இரு புறமும் போக்குவரத்து முடங்கி நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. தெற்கு பைபாஸ் முனை, விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக மாறிவிட்டது.

வடக்கு பைபாஸ் முனையில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பதுபோல், தெற்கு பைபாஸ் முனையில் விபத்துகளை தடுக்கவும், வாகனங்கள் தாறுமாறாக செல்வதை தடுக்க போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us