sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தரைப்பாலம் அமைக்க கோரி உண்ணாவிரதம் இருக்க மக்கள் முடிவு

/

தரைப்பாலம் அமைக்க கோரி உண்ணாவிரதம் இருக்க மக்கள் முடிவு

தரைப்பாலம் அமைக்க கோரி உண்ணாவிரதம் இருக்க மக்கள் முடிவு

தரைப்பாலம் அமைக்க கோரி உண்ணாவிரதம் இருக்க மக்கள் முடிவு


ADDED : ஏப் 21, 2025 04:53 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 04:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே தரைப்பாலம் அமைக்கக்கோரி கிராம மக்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் பாரதி நகர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

தற்போது பாரதி நகர் - அரசூர் கூட்ரோடு பகுதி வரை நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இதனைத் தவிர்க்க பாரதி நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் தரைப்பாலம் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதிகாரிகள் தரைப்பாலம் அமைத்து தருவதாக தெரிவித்திருந்த நிலையில், அதன் பிறகு அதனை கண்டு கொள்ளவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த பாரதி நகர் பகுதி மக்கள் வரும் 23ம் தேதி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து அரசூர் கூட்ரோடு பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், அதற்கான அனுமதி வழங்குமாறும் திருவெண்ணெய்நல்லுார் காவல் நிலையத்தில் நேற்று காலை 100க்கும் மேற்பட்டோர் அரசூர் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் மனு அளித்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us