sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி தேற்குணம் மக்கள் சாலை மறியல்

/

வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி தேற்குணம் மக்கள் சாலை மறியல்

வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி தேற்குணம் மக்கள் சாலை மறியல்

வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி தேற்குணம் மக்கள் சாலை மறியல்


ADDED : டிச 20, 2024 04:59 AM

Google News

ADDED : டிச 20, 2024 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி, தேற்குணம் கிராம மக்கள், புதுச்சேரி - திண்டிவனம் பைபாசில் மறியலில் ஈடுபட்டனர்.

பெஞ்சல் புயல் மற்றும் மழை நிவாரணம் வழங்காததை கண்டித்து தைலாபுரம் கிராம மக்கள் நேற்று காலை 10:00 மணிக்கு தைலாபுரம் மெயின் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

கிளியனுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து 10:15 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.

மேலும் ஒரு மறியல்


தேற்குணம் கிராம மக்கள் நிவாரணம் வழங்கக்கோரி ஊராட்சி தலைவர் வினோதினி குமார் தலைமையில், புதுச்சேரி - திண்டிவனம் பைபாசில் கிளியனுார் செல்லும் சந்திப்பு சாலையில் 11:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். கிளியனுார் போலீசார் மற்றும் வானுார் தாசில்தார் நாராயணமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஒரு வாரத்திற்குள் நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று 12:00 மணியளவில் கலைந்து சென்றனர்.

செஞ்சி


வல்லம் அடுத்த மரூர் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ள நிவாரணம் கேட்டு நேற்று காலை 9:30 மணியளவில் செஞ்சி - ரெட்டணை சாலையில் மறியல் செய்தனர்.

தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து 9:20 மணிக்கு மறியலை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us