sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யாத மக்கள்

/

மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யாத மக்கள்

மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யாத மக்கள்

மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யாத மக்கள்


ADDED : ஏப் 19, 2025 04:37 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 04:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய மக்கள் வராததால், தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

விழுப்புரம் அருகே மேல்பாதி தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில், கடந்த 2023 மே மாதம் நடந்த தீமிதி திருவிழாவில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, தடை உத்தரவு பிறப்பித்து கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், கடந்த 2024 மார்ச் மாதம் கோவில் திறக்கப்பட்டு, தனி அர்ச்சகர் மூலம் ஒரு கால பூஜை மட்டும் நடந்தது.

தொடர்ந்து, 145 தடை உத்தரவை ரத்து செய்து, கோவிலை திறந்து, அனைத்து சமூகத்தினரும் வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி நேற்று முன்தினம் காலை கோவில் திறந்து பூஜைகள் முடிந்து, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

வெள்ளிக்கிழமையான நேற்று இரண்டு கால பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 5:45 மணிக்கு, அர்ச்சகர் அய்யப்பன் முதற்கால பூஜை செய்தார்.

ஆனால், எதிர்ப்பு தெரிவித்த தரப்பினர் உட்பட பொதுமக்கள் யாரும் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் செல்லவில்லை. இதனால், காலை 7:00 மணிக்கு கோவில் மூடப்பட்டது.

கோவில் திறந்தும் சுவாமி தரிசனத்திற்கு மக்கள் வராததால், கிராமத்தில் பதட்டம் நிலவுவதை தொடர்ந்துனா நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us