sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெட்ரோல் குண்டு வீச்சு; வாலிபருக்கு வலை

/

பெட்ரோல் குண்டு வீச்சு; வாலிபருக்கு வலை

பெட்ரோல் குண்டு வீச்சு; வாலிபருக்கு வலை

பெட்ரோல் குண்டு வீச்சு; வாலிபருக்கு வலை


ADDED : டிச 17, 2024 06:58 AM

Google News

ADDED : டிச 17, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்; மரக்காணம் அருகே முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கூனிமேடுகுப்பம், கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினாயகமூர்த்தி, 45; அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஜான்சன், 22; மீனவர்கள். இருவருக்குமிடையே முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வினாயகமூர்த்தி கடற்கரையோரம் இயற்கை உபாதை கழிக்கச் சென்றார். அவரை வழிமறித்து ஜான்சன் தகராறு செய்துள்ளார். அங்கிருந்த சக மீனவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

அன்று இரவு 12:00 மணிக்கு வினாயகமூர்த்தியின் வீட்டு ஜன்னலில் ஜான்சன் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினார். இதில், வீட்டின் ஜன்னல் உடைந்து சேதமானது.

இது குறித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து ஜான்சனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us