/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனநல நிறுவனங்கள் பதிவு செய்ய கலெக்டர் அறிவுரை
/
மனநல நிறுவனங்கள் பதிவு செய்ய கலெக்டர் அறிவுரை
ADDED : ஆக 21, 2025 07:39 AM
விழுப்புரம்: மாவட்டத்தில் பதியாமல் செயல்படும் மனநல நிறுவனங்கள், மையங்கள் ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு :
மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாதத்திற்குள் தமிழ்நாடு மாநில ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மாவட்டம் முழுதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதித்தவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்கு ஆளானவர்களுக்கான,
மறுவாழ்வு மையம் ஆகிய மனநல நிறுவனங்கள், மையங்கள் செயல்படுகிறது.
இந்த நிறுவனம், மையங்கள் அனைத்தும் சட்டப்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் அலுவலகத்தில் பதிவு செய்ய ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மனநலம் மையங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இணையதள முகவரியிலோ, தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ பெறலாம். இது பற்றி கூடுதல் விபரம் அறிய 044 26420965 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பதிவு செய்யாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள், நிறுவனங்கள் ஒரு மாதத்திற்குள் தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தவறினால் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.