sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செஞ்சியில் இருந்து அவலுார்பேட்டைக்கு இடம் மாறும் விளையாட்டு மைதானம்

/

செஞ்சியில் இருந்து அவலுார்பேட்டைக்கு இடம் மாறும் விளையாட்டு மைதானம்

செஞ்சியில் இருந்து அவலுார்பேட்டைக்கு இடம் மாறும் விளையாட்டு மைதானம்

செஞ்சியில் இருந்து அவலுார்பேட்டைக்கு இடம் மாறும் விளையாட்டு மைதானம்


ADDED : ஆக 27, 2025 11:10 PM

Google News

ADDED : ஆக 27, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சியில் விளையாட்டு மைதானம் அமைக்க போதிய இடம் இல்லாத காரணத்தால், அவலுார்பேட்டைக்கு மாற்றம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியாக செஞ்சி தொகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் தடகளம் உட்பட பல்வேறு விளையாட்டுகளில் திறமையானவர்களாக உள்ளனர். வசதி இல்லாத குடும்பங்களை சேர்ந்த இந்த மாணவர்கள் தனியாக சிறப்பு பயிற்சி எடுப்பதில்லை. பள்ளியில் மற்ற மாணவர்களுடன் பயிற்சி பெறும் இந்த மாணவர்கள், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்று வருகின்றனர்.

எனவே மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கும், மாணவர்களை ஊக்கப்படுத்தி, அரசு சார்பில் பயிற்சி அளிக்கவும் விளையாட்டு மைதானத்தையும், பயிற்சி அரங்கமும் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் தற்போது, 5.50 ஏக்கர் இடத்தில் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கும், விளையாட்டு விழாக்கள் நடத்துவதற்கும் அரங்கம் அமைக்க தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முன் வந்துள்ளது.

இதற்கு செஞ்சியில் போதிய அரசு இடம் இல்லாததால் விளையாட்டு மைதானத்தை அவலுார்பேட்டைக்கு மாற்றி உள்ளனர். அங்கு, அரசு பள்ளி அருகே இடம் தேர்வு செய்துள்ளனர்.

அவலுார்பேட்டை, விழுப்புரம் மாவட்டத்திற்கும், செஞ்சி தொகுதிக்கும் கடை கோடி பகுதியாக உள்ளது.

செஞ்சி தொகுதியில் உள்ள தென்புத்துார், ஏதாநெமிலி கிராமங்களில் இருந்து 60 கி.மீ., துாரத்திலும், அனந்தபுரம், செஞ்சி, நல்லாண்பிள்ளை பெற்றாள், வல்லம் பகுதியில் இருந்து 20 முதல் 50 கி.மீ., தொலைவிலும் அவலுார்பேட்டை உள்ளது. அத்துடன் செஞ்சியில் இருந்து குறைந்த அளவு பஸ் வசதியே உள்ளது.

இவ்வளவு தொலைவில் விளையாட்டு மைதானம் அமைப்பதால் மாணவர்கள் பயன் பெற முடியாமல் விளையாட்டு மைதானம் செயல் இழந்து போகும்.

எனவே தொகுதியில் பஸ் வசதியும், மையப்பகுதியாகவும் உள்ள வளத்தி, சத்தியமங்கலம் போன்ற மாற்று இடங்களை தேர்வு செய்து விளையாட்டு மைதானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us