ADDED : பிப் 13, 2026 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்: மரக்காணம் அருகே பிளஸ் 1 மாணவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மரக்காணம் அடுத்த குரும்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகள் பவதாரணி, 16; மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கதவை பூட்டிக்கொண்டு துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

