/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் பா.ம.க., அன்புமணி நிவாரணம்
/
திண்டிவனத்தில் பா.ம.க., அன்புமணி நிவாரணம்
ADDED : டிச 03, 2024 06:57 AM

திண்டிவனம்: திண்டிவனம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பா.ம.க., தலைவர் அன்புமணி பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினார்.
திண்டிவனம் எம்.ஜி.ஆர். நகர் காந்தி நகர், நாகலாபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பா.ம.க., தலைவர் அன்புமணி பார்வையிட்டார். அப்போது, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை அன்புமணி வழங்கினார்.
இதில் மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார், மாவட்ட செயலாளர் ஜெயராஜ், துணை செயலாளர் பால்பாண்டியன்ரமேஷ், நகர செயலாளர் மணிகண்டன், முன்னாள் நகர செயலாளர் சண்முகம், ராஜேஷ், சிறுபான்மையினர் அணி பிச்சைமுகமது உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.