/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆட்டோ டிரைவர் மீது போக்சோ வழக்கு
/
ஆட்டோ டிரைவர் மீது போக்சோ வழக்கு
ADDED : ஜன 29, 2026 05:27 AM
கோட்டக்குப்பம்: ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வானுார் தாலுகாவில் உள்ள 13 வயது சிறுமி புதுச்சேரிக்கு சக மாணவிகளுடன் ஆட்டோவில் பள்ளிக்குச் சென்று வந்தார்.
அப்போது ஆட்டோ டிரைவர் பூபாலன், 50; என்பவர் குறிப்பிட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி, தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், ஆட்டோ டிரைவர் பூபாலன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

