ADDED : மார் 30, 2025 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே ஆடு திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பல்லரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 49; கூலி தொழிலாளி. இவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் ஆடுகளை வீட்டின் பின்புறத்தில் கட்டி வைத்திருந்தார்.
அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, 2 ஆடுகள் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.