/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பேஸ்புக்கில் மார்பிங் படம் போலீசார் விசாரணை
/
பேஸ்புக்கில் மார்பிங் படம் போலீசார் விசாரணை
ADDED : மே 13, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண் மற்றும் அவரது 12 வயது மகளின் புகைப்படங்களை, மர்ம நபர்கள் சிலர் ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பதவிட்டுள்ளனர்.
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.