sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போதையில் நண்பர் கொலை வாலிபரிடம் போலீஸ் விசாரணை

/

போதையில் நண்பர் கொலை வாலிபரிடம் போலீஸ் விசாரணை

போதையில் நண்பர் கொலை வாலிபரிடம் போலீஸ் விசாரணை

போதையில் நண்பர் கொலை வாலிபரிடம் போலீஸ் விசாரணை


ADDED : பிப் 21, 2025 05:10 AM

Google News

ADDED : பிப் 21, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: மரக்காணம் அருகே குடி போதையில் நண்பரை வெட்டி கொலை செய்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கந்தாடு கிராமத்தில் முட்புதாரில் வெட்டு காயங்களுடன் ஆண் உடல் கிடப்பதாக மரக்காணம் போலீசுக்கு நேற்று மதியம் தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது, செங்கல்பட்டு மாவட்டம், வெள்ளகொண்ட அகரத்தை சேர்ந்த ஜெயபால் மகன் ஜெயசீலன், 40; பெயிண்டர். இவரது நண்பர் மரக்காணம் அடுத்த பிளாரிமேட்டை சேர்ந்த எட்டியான் மகன் சரண்குமார், 26; நண்பர்கள். இருவரும் நேற்று முன்தினம் 19ம் தேதி மாலை 5:00 மணிக்கு மரக்காணம் டாஸ்மாக்கில் மது வாங்கிக்கொண்டு கந்தாடு பகுதியில் தனியார் பள்ளி பின்புறம் முட்புதர் அருகே மது அருந்தியுள்ளனர்.

அப்போது, ஜெயசீலன் அதிகளவு மது அருந்தியதால், போதை தலைக்கேறி, சரண்குமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த ஜெயசீலன் பைக்கில் இருந்த கத்தியை எடுத்து சரண்குமாரை வெட்ட வந்துள்ளார். உடன், ஜெயசீலனிடமிருந்து கத்தியை பிடுங்கி ஜெயசீலனை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார்.

அதையடுத்து, ஜெயசீலன் உடலை முட்புதாரில் வீசிவிட்டு, சரண்குமார் தப்பி சென்றார்.

இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து நேற்று சரண்குமாரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us