/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை
/
நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை
ADDED : பிப் 06, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
செஞ்சி அடுத்த பசுமலை தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரவன், 47; இவர், கடந்த 1ம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்குச் சென்றார். மதியம் 1:30 மணிக்கு வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே பீரோவில் இருந்த 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சவரன் நகை, 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.