ADDED : ஏப் 28, 2025 04:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் வீட்டில் இறந்து கிடந்த தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம் டி.வி.நகரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் மகன் திலீப்குமார், 28; திருமணம் ஆகாதவர். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது, மயங்கி கிடந்தார். உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து வரும் வழியிலே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திண்டிவனம் டவுன் போலீசார், திலீப்குமார் மயங்கி கிடந்த இடத்தில், கொக்கு பிடிப்பதற்கு பயன்படுத்தும் மருந்து பாட்டிலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.