/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொன்முடி குவாரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
/
பொன்முடி குவாரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 18, 2025 05:12 AM
விழுப்புரம்: பொன்முடி எம்.எல்.ஏ., மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் 28 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா, பூத்துறையில் உள்ள அரசு செம்மண் குவாரியில் அரசு அனுமதி மீறி செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்படுத்தியதாக, பொன்முடி எம்.எல்.ஏ., அவரது மகன் கவுதம சிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட லோகநாதன் முன்பே உடல் நலக்குறைவால் இறந்தார். இந்த வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களில், இதுவரை 63 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில், அதில் 30 பேர் அரசு தரப்பிற்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இதில் கோபிநாத், சதானந்தம் ஆகியோர் ஆஜராகினர்.
பொன்முடி எம்.எல்.ஏ., கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், கோதகுமார், ஜெயச்சந்திரன் ஆகியோர் ஆஜராகவில்லை.
இவர்கள் ஆஜராகததற்கான காரணம் குறித்து தி.மு.க., வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி மணிமொழி, வழக்கு விசாரணையை வரும் 28 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.