ADDED : டிச 23, 2024 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி பூஜையை முன்னிட்டு சண்முகா அர்ச்சனை நடந்தது.
மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமி கோவில் சஷ்டியை முன்னிட்டு காலை 6;00 மணிக்கு சுவாமிக்கு நறுமணப் பொருட்களினால் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. காலை 11:00 மணிக்கு பாலபிஷேகம், மகா தீபாராதனைக்கு பின்னர் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காலை 11 மணிக்கு யாக சாலை பூஜையும், பிற்பகல் 1:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கபட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.