நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் பகுதி கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தில் உள்ள பிரம்மராம்பிகை உடனுறை மல்லிகார்ஜினேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 6:00 மணிக்கு கோவில் மூலவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப்பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள நந்திபகவானுக்கு நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
இது போன்று மயிலம் சுந்தர விநாயகர், பெரும்பாக்கம், நெடி, பாதிராப்புலியூர், ஆலகிராமம் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.