/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போலீசை கண்டித்து மேல்மலையனுாரில் மறியல்
/
போலீசை கண்டித்து மேல்மலையனுாரில் மறியல்
ADDED : ஜன 26, 2025 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் பனை ஏறும் விவசாயிகள் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
செஞ்சி மதுவிலக்கு போலீசார் நேற்று சீயப்பூண்டி கிராமத்தில் ரெய்டு செய்தனர். அப்போத, அங்கு கள் இறக்கியதாக இருவரை பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
போலீசார் பொய் வழக்கு போடுவதை கண்டித்து பனை ஏறி விவசாயிகள் நேற்று காலை 11:30 மணிக்கு மேல்மலையனுாரில் ஈயகுணம் கூட்டுசாலையில் மறயலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் டி.எஸ்.பி., கார்த்திகாபிரியா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர்.

