/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிவாரணம் வழங்க கோரி திண்டிவனம் அருகே மறியல்
/
நிவாரணம் வழங்க கோரி திண்டிவனம் அருகே மறியல்
ADDED : டிச 13, 2024 07:22 AM

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த மேல்பேரடிக்குப்பத்தில், வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டிவனம் அடுத்த உள்ள மேல்பேரடிக்குப்பம் கிராம மக்களுக்கு வெள்ள நிவாரணமான 2,000 ரூபாய் உள்ளிட்ட நிவாரண உதவி வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்து நேற்று நேற்று காலை 9:30 மணியளவில் ஊராட்சி தலைவர் பூங்கொடி தலைமையில் திண்டிவனம் - செஞ்சி சாலையில் மேல்பேரடிக்குப்பம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாசில்தார் சிவா, திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., பிரகாஷ் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு வாரத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று, 10:00 மணியளவில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.